..அருமையான சமையலுங்க அடிக்கடி வந்து போங்க..

Monday, March 1, 2010

மோ மோ செய்து பாருங்க

ஸாரி இவர் மா மா இல்லீங்க மோ மோ.
இது நார்த் ஈஸ்ட்ல பண்ணற டிபன்க
இது நம்ம ஊர் கொழுக்கட்டை மாதிரி சமாசரங்க
சரி இதை செய்வது எப்புடி?

ஒரு கப் பச்சரிசிய இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து grinder ல் தோசை மாவு போல் அரைத்து கொள்ளவும் அடுப்பை பற்றவைத்து கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய்

விட்டு அரைத்த மாவில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கடாயில் நன்றாக கிளறி , மாவு ஒரு பந்து போல வந்ததும் அடுப்பை அணைக்கவும்

மாவை ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.


காரெட் , பச்சை பட்டாணி, குடை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி கரம் மசாலா சேர்த்து , தேவையான அளவு அளவு உப்பும் சேர்த்து வதக்கவும் , இப்பொழுது அடுப்பு சிம் ல் இருக்க வேண்டும்.

வேக வைத்த மாவை சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். பிறகு உருண்டைகளை

தட்டையாக செய்து கொள்ளவும் (கொழுகட்டைக்கு செய்வது போல்) இதற்குள் வதக்கி வைத்த காய் கறியை வைத்து மூடி . உருண்டையாக செய்து கொள்ளவும். இவற்றை குக்கரில்v ஏழு அல்லது எட்டு நிமிடம் வேக வைத்து இறக்கினால் மோ மோ தயார் .

இதை தொட்டுக்கொள்ள கொத்துமல்லி கார சட்னி அல்லது சாசுடனும் சாப்பிடலாம்.

என்ன செய்து பார்த்து விடுவோமா ?

















































1 comment: