..அருமையான சமையலுங்க அடிக்கடி வந்து போங்க..

Monday, March 8, 2010

சுரிதார் தெரியும் தரிதார் தெரியுமா?


இது ஒரு உருளை கிழங்கு கூட்டு பஞ்சாப் பக்கம் ரொம்ப பேமசானது நாமும் செய்து பாக்கலாமா?
உருளை கிழங்கை தோல் உரித்து , நறுக்கி வைத்துக்கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, தனியா, மஞ்சள்பொடி, சாதா மிளகாய் பொடி, உப்பு இவற்றை mixi யில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சீரகத்தை பொரித்துக்கொள்ளவும் ,பிறகு அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்றாக வதக்கவும் . பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய கிழங்கை அதில் போட்டு தண்ணீர் சேர்க்கவும் (இது கொஞ்சம் நீர்க்க இருந்தால் நன்றாக இருக்கும்)
குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்
பிறகு இறக்கி பரிமாறவும்
சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் ......பலே பலே ....ஓய்...ஓய்

1 comment: